- உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்:
சென்ற தொடரில் பெண்களைப் பாதுகாக்க நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தந்தோம்
ஆனால் உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை
பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான் சமீபத்தில் லணடன் மாநகரில் நடந்த நிகழ்வு ஒன்று :
ஒரு ஒதுக்குப் புறம்பான ஓரப் பகுதியில் சில ரவுடிகள் ஒளிந்து நின்றுகொண்டு அந்த வழியாக வரும் பெண்களை நோட்டமிட்டுக்கொண்டிருப்பர் யாராவது தனிமையில் பெண் வந்தால் அவளை அப்படியே கடத்திக் கற்பழிப்பது அல்லது நகையைக் களவாடுவது அவர்களின் வழக்கம்.
அன்றும் அப்படித்தான் வழக்கம் போல வாய்ப்பை எதிர்பார்த்து வாயைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றனர். ஒருத்தி கடந்து போனாள். விட்டுவிட்டார்கள் அடுத்து இன்னொருத்தி நடந்துபோனாள். அப்படியே அவளை அள்ளி காரில் போட்டுக்கொண்டு காரியத்தை முடிக்க கடும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் அதற்குள்ளாக ஒரு போலீஸ் வாகனம் விரைந்து வந்து அவர்களைத் துரத்திப் பிடித்தது
பொதுவாக லண்டனில் பல இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் உண்டு அது இது போன்ற கயவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் அது தெரியாமல் அந்த மூடர்கள் முட்டாள்தனமாய் முயற்சி செய்துகொண்டிருக்கும்போது காவலர்கள் வந்து கச்சிதமாய்ப் பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தினார்கள் நீதிபதி விசாரித்தார்: நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் உங்கள் நோக்கம் என்ன ?
அய்யா நாங்கள் ஒதுக்குபுறமாய் ஒளிந்து நின்றுகொண்டு தன்னந்தனியாக செல்லும் அப்பாவிப் பெண்களை அமுக்கிப் பிடித்து அவர்களை காலி செய்வது அல்லது கற்பழிப்பது அல்லது களவாடுவது இதுதான் எங்களின் திட்டம்''
'' அப்படியா அவ்வாறானால் இந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னொருத்தி பர்தா அணிந்தவள போனாளே அவளை ஏன் நீங்கள் ஒன்றும் செய்யவில்லை ?
''அவள் தனியாக செல்லவில்லை அவளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு ஆசாமிகள் இணைந்து சென்றனர் எனவே அவளை விட்டுவிட்டோம் என்றனர்
உடனே நீதிபதி அந்த கேமரா பதிவு வீடியோவை ஓடவிட்டார் . அதில் பர்தா அணிந்த அந்த பெண் அப்போது தனியாக செலவ்துதான் தெரிந்தது
ஆனால் அந்த ரவுடிகள் அடித்துக் கூறினார் இல்லை நாங்கள் நன்றாக பார்த்தோம் அவளுடன் பாதுகாப்புக்கு இரண்டு பேர் சென்றதால்தான் விட்டோம் .''
இது எல்லோருக்கும் புரியாத புதிராக இருந்தது. ஆனால் நமக்கு இது புரியாத புதிரல்ல . ஒரு பெண் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து பர்தா என்பது ஒரு பாதுகாப்பு கவசம் என்று உணர்ந்து விரும்பி அணிந்து சென்றால் அவளைப் பாதுகாக்க அல்லாஹ் அமரர்களைக் கூட நியமிப்பான் என்பது ஆச்சரியமல்ல .
பர்தா ஒரு கொடுமையா?:
இன்னும் சொல்லப்போனால் அபலைப் பெண்களின்மீது அக்கறை கொள்வதில் அண்ணல் நபிக்கு நிகர் கிடையாது . பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத வாழ்வுரிமை இல்லாதஅந்த அறியாமை காலத்தில் -ஏன் பெண்களை ஒரு மனிதப் பிறவியாகவே கருதாத அந்த காலத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் நானிலத்தில் அவதரித்து அந்த உரிமைகளை எல்லாம் மீட்டுக் கொடுத்தார்கள்
அவர்கள் உலகைப் பிரிவதற்கு முன்பு இறுதி ஹஜ்ஜிலே அரபா மைதானத்திலே ஒன்றே கால் இலட்சம் மக்கள் கூடியிருந்த அந்த கூட்டத்திலே தன் இறுதிப் பேருரை ஆற்றுகிறார்கள் அதில்கூட அவர்கள் அதிகம் வலியுறுத்திய அடிப்படையான விஷயம் பெண்களைப் பற்றியது.
فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ(صحيح مسلم)
''என் அருமை சமுதாயமே! கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)
பெண்களே ! நரகை விட்டும் தப்பித்துக் கொள்ளுங்கள் . உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன் . அதற்கு காரணம் உங்களில் சிலர் அதிகமாக ஏசுவதும் கணவனிடத்தில் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்வதுமாக இருக்கலாம். ஆகவே அதைத் தவிர்ந்துகொண்டால் நீங்கள் சுவனத்தில் சுகமாக இருக்கலாம். என்று சுலபமான வழியை சொல்லிக் கொடுத்தவர்கள் சுந்தர நபி ஸல் அவர்கள்
நரகத்தின் கொடுமையிலிருந்து தப்பிக்க வழி காட்டிய நாயகம் அவர்கள் நாதாரிகளின் சில்மிஷங்களிளிருந்தும் தப்பிக்க நங்கையருக்கு நல்லதொரு வழிமுறையை வகுத்தார்கள் அதுதான் பர்தா.
கற்புக்கு களங்கம் மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து :
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம்வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனதுமுடிவை வெளியிட்டிருக்கிறது.
தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
இது வெறும் யூகமல்ல ; இந்த ஆராய்ச்ச்சியின் விரிவான தகவலைநான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்
பர்தாவை முழுவதும் நடைமுறைப் படுத்தினால் கன்னிகளின் கற்புக்கு மட்டுமல்ல ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் உண்டு.
இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. 2003ல் ஜெர்மனியில் மட்டும் 8000 பெண்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்களிடம் கேட்கப்பட்டது : நீங்கள் கலிமா சொன்னதற்கு என்ன காரணம்?
அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா?
மேற்கத்திய கலாச்சாரம் எங்களை சீரழித்துவிட்டது. இதனால் பெண்கள் மானமரியாதையை இழந்து மன அமைதியைத் தொலைத்து அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து கொண்டதால் பாதுகாப்பும் உறுதியாகிவிட்டது; கண்ணியமும் கிடைத்துவிட்டது''என்றார்களாம் அந்த பெண்கள்.
பயணிப்போரின் பாதுகாப்புக் கவசம் ஹெல்மெட் என்றால்
பாவையரின் பாதுகாப்புக் கவசம் பர்தா என்பதை ஆதாரங்களை அடுக்கித்தானா அறியப்படவேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக